சென்னை- கொல்லம் விரைவு ரயில் சிவகாசி நிலையத்தில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை எழும்பூரில் இருந்து விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர் வழியாக கேரள மாநிலம் கொல்லத்திற்கு விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் சிவகாசியில் நின்று செல்ல வேண்டும் என ரயில் பயணிகள் பலரும் கோரிக்கைகள் விடுத்து வந்தனர். இந்நிலையில் இதன் முதற்கட்ட சோதனையாக ஜூலை 27 லிருந்து சென்னை எழும்பூரில் இருந்து கொல்லம் செல்லும் வண்டி எண் :16101, சிவகாசி ரயில் நிலையத்திற்கு நள்ளிரவு 1:52 மணி முதல் 1.53 மணி வரை ஒரு நிமிடம் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.