சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்காமல் வாகனத்தை பார்க்கிங் செய்வோருக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயிலில் பயணிக்காமல் நிலையத்தில் உள்ள பார்க்கிங்கில் வாகனத்தை நிறுத்திச் செல்பவர்களால் இடப்பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால், மெட்ரோ ரயில் பயணிகள் வாகனத்தை நிறுத்த முடியாத நிலை உள்ளது. இதைக் கட்டுப்படுத்த மெட்ரோ ரயிலில் பயணம் செய்யாமல், மெட்ரோ நிலையத்தில் உள்ள பார்க்கிங்கில் வாகனங்களை நிறுத்துவதற்கான கட்டணம் நாளை முதல் உயர்த்தப்படுகிறது.
அதன்படி, இருசக்கர வாகனங்களை நிறுத்த 6 மணி நேரத்துக்கு ரூ.20-ம், 12 மணி நேரத்துக்கு ரூ.30-ம், 12 மணி நேரத்துக்கு மேல் ரூ.40-ம், சேவை நேரத்தை கடந்தால், ரூ.50-ம் கட்டணம் செலுத்த வேண்டும். இதுபோல, நான்கு சக்கர வாகனங்களுக்கு 6 மணி நேரத்துக்கு ரூ.30-ம், 12 மணி நேரத்துக்கு ரூ.40-ம், 12 மணி நேரத்துக்கு மேல் 40-ம், சேவை நேரத்தை கடந்தால் ரூ.100-ம் கட்டணம் செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.