பிசிசிஐ தேர்வுக் குழுத் தலைவர் சேத்தன் சர்மா ராஜினாமா

February 17, 2023

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுத் தலைவர் சேத்தன் ஷர்மா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனியார் தொலைக்காட்சி நடத்திய ஸ்டில் ஆபரேஷனில் பல்வேறு சர்ச்சைக்குரிய விஷயங்களை அவர் பேசி இருந்தார். குறிப்பாக, விராட் கோலி, ரோஹித் சர்மா, பாண்டியா போன்ற வீரர்களின் உடற்பகுதி குறித்த விஷயங்களைப் பற்றி அவர் பேசியது சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதனால் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அவரது […]

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுத் தலைவர் சேத்தன் ஷர்மா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி நடத்திய ஸ்டில் ஆபரேஷனில் பல்வேறு சர்ச்சைக்குரிய விஷயங்களை அவர் பேசி இருந்தார். குறிப்பாக, விராட் கோலி, ரோஹித் சர்மா, பாண்டியா போன்ற வீரர்களின் உடற்பகுதி குறித்த விஷயங்களைப் பற்றி அவர் பேசியது சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதனால் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொண்டதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

கடந்த ஆண்டு, இந்திய அணி பல்வேறு போட்டிகளில் தோல்வியை சந்தித்ததால், பிசிசிஐ தேர்வுக்குழு கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இந்நிலையில், சேத்தன் சர்மா பதவிக்காலம் நிறைவுக்கு வந்ததாக கூறப்பட்டு, புதிய தலைவரை நியமிப்பதற்காக சிவசுந்தரதாஸ், சுப்ராடோ பானர்ஜி, சலீல் அங்கோலா, ஸ்ரீதரன் சரத் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, அவர்கள் மூலமாக, கடந்த மாதம் மீண்டும் சேத்தன் சர்மாவே தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், அவர் மீது எழுந்துள்ள விமர்சனங்களால், அவர் ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu