8 தமிழறிஞர்களின் நூல்களை நாட்டுடைமையாக்கி உரிமைத்தொகை ரூ.1 கோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விடுதலை ராஜேந்திரன், நெல்லை செ.திவான், நா.மம்மது உட்பட 8 தமிழறிஞர்களின் நூல்களை நாட்டுடைமையாக்கி உரிமைத்தொகை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் வழங்கப்பட்டது. மறைந்த நெல்லை கண்ணன், கந்தர்வன், சோமலே, விருதுநகர் ராசய்யா, தஞ்சை பிரகாஷ் நூல்களும் நாட்டுடைமையாக்கப்பட்டது. தமிழ் மொழி வளர்ச்சி, சமூக முன்னேற்றத்துக்கு பாடப்பட்டதற்காக 8 அறிஞர்களின் நூல்களை நாட்டுடைமையாக்கி ரூ.1 கோடி நூல் உரிமைத் தொகையை முதலமைச்சர் வழங்கினார்.
தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறைக்கு சார்பில் 51 பேருக்கு இன்று விருதுகள் வழங்கப்பட்டது. 2021-ம் ஆண்டுக்கான தமிழ் செம்மல் விருதுகளை 38 தமிழ் அறிஞர்களுக்கும், சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதுகளை 10 நபர்களுக்கும் முதலமைச்சர் நேரடியாக வழங்கினார்.