அரசு திட்டங்களின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக முதலமைச்சர் சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை புரிய உள்ளார்.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசு திட்டங்களை மக்கள் சென்று சேர கள ஆய்வில் ஈடுபடுகிறார். இது தொடர்பாக இதற்கு முன்னதாக கோவை, விருதுநகர், ஈரோடு, வேலூர் ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்ட அவர்,நாளை 21-ம் தேதி சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை புரிய உள்ளார். இதற்காக இவர், திருச்சியில் இருந்து காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்திற்கு பயணித்து, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் குடும்ப நிதியில் கட்டப்பட்ட வளர் தமிழ் நூலகத்தை திறந்து வைத்து, அடுத்ததாக திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்த பின்னர் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு பேசுவார். அதனை தொடர்ந்து 22-ம் தேதி, சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கல்லூரியில் புதிய திட்டங்களின் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் 50,000 பேர் கொண்ட நலத்திட்ட உதவிகளை வழங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.