சீனா ஐந்து அமெரிக்க பாதுகாப்பு தொழில் நிறுவனங்களுக்கு தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக சீன வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, சீனாவுக்கு சொந்தமான தைவான் பிராந்தியத்திற்கு அமெரிக்கா ஆயுத விற்பனை செய்கிறது. சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா தன்னிச்சையாக தடை விதித்துள்ளது. இந்த நடவடிக்கைகள் சீனாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பதிலடி தரும் விதமாக அந்நாட்டின் ஐந்து பாதுகாப்பு தொழில் நிறுவனங்களுக்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளது.
அவை விஏஇ சிஸ்டம் லேன்ட் அண்ட் ஆர்மன்ஸ், அரோவிரோன்மெண்ட், அலையன்ட் ஆப்ரேஷன், வயசாட், டேட்டா லிங்க் சொல்யூஷன்ஸ் என்பவை ஆகும். அந்த ஐந்து நிறுவனங்களுக்கு உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் முடக்கப்படும் .அந்த நிறுவனங்களுடன் சீனாவில் உள்ள எவரும் பரிவர்த்தனை மேற்கொள்ளக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. கடந்த டிசம்பரில் அமெரிக்க தைவானுக்கு 2500 கோடி மதிப்பிலான ராணுவ கருவிகளை விற்பனை செய்ய ஒப்புதல் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.