சீனா டோக்லாம், பாங்காக் லேக் ப போன்ற எல்லை பகுதியில் கட்டமைப்புகளை ஏற்படுத்தி வருவதாக பென்டகன் தெரிவித்துள்ளது. இந்தியா மற்றும் சீனாவின் இடையே எல்லைக்கோடு தொடர்பான பிரச்சனை தொடர்ந்து இருந்து வருகிறது. அதில் அவ்வப்போது சீனா இந்தியா எல்லைக்குள் நுழைவது மற்றும் அதனை இந்தியா எதிர்ப்பு தெரிவித்து பின்வாங்குவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த 2020 இதுபோன்ற சம்பவத்தின் போது இருநாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் உயிர் சேதம் ஏற்பட்டது. அதன் பின்பு இந்தியா அங்கு எல்லை பாதுகாப்பை அதிகரித்த போதிலும் சீனா தனது கட்டமைப்புகளை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
இதில் கடந்த ஆண்டு சாலைகள் அமைத்தல், விமான நிலைய அமைத்தல், ஹெலிபேடுகள் அமைத்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததாக பென்டகன் தெரிவித்துள்ளது. அதில் டோக்லாம், பாங்காக் லேக் எல்லை பகுதிகளில் இந்த கட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.