சீனாவில் கொரோனா நோய் தொற்றுக்கான தினசரி பதிவு, கடந்த ஏப்ரல் மாதத்திற்கு பின்னர், தற்போது உச்சத்தை தொட்டுள்ளது. குறிப்பாக, புதன்கிழமை அன்று, 29754 புதிய கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதத்தில், ஒரே நாளில் 28973 கொரோனா நோயாளிகள் பதிவு செய்யப்பட்டதே உச்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், பெய்ஜிங், ஷாங்காய் போன்ற நகரங்களில் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சீனாவின் பல மாகாணங்களில் ஊரடங்கு மற்றும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. முக்கிய பொது இடங்களுக்கு வருவதற்கு பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. ஆனாலும் தொடர்ந்து நோய் பரவல் அதிகரித்துள்ளது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.