பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்காக, 9 நாடுகளின் சுற்றுலாப் பயணிகளுக்கு விசா தேவையில்லை என சீனா அறிவித்துள்ளது.
சீனாவில் சுற்றுலா துறையை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டுள்ளன. கொரோனா பெருந்தொற்று காரணமாக முடங்கியிருந்த சுற்றுலா துறை தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்காக, 9 நாடுகளின் சுற்றுலாப் பயணிகளுக்கு விசா தேவையில்லை என சீனா அறிவித்துள்ளது. இந்த நாடுகள் என்பது ஜப்பான், பல்கேரியா, ருமேனியா, மால்டா, குரோஷியா, மாண்டினீக்ரோ, வடக்கு மாசிடோனியா, எஸ்டோனியா மற்றும் லாட்வியா ஆகும். இந்த பயணிகள் 30 நாட்கள் வரை சீனாவில் தங்கிக் கொள்ள முடியும். இந்த திட்டம் வருகிற 30-ந் தேதி முதல் அமலுக்கு வரும். இதன் மூலம், சீனாவுக்கு விசா இல்லாமல் பயணிக்க அனுமதிக்கப்படும் நாடுகளின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது.