சீனாவில் 18 வயசுக்கு உட்பட்ட குழந்தைகள் ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்த கடுமையான உத்தரவு போடப்பட்டுள்ளது.
சீனாவின் செல்போன் கட்டுப்பாட்டாளர் அமைப்பு சில நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதில் 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் ஒரு நாளைக்கு அதிகபட்சம் 2 மணி நேரம் மட்டுமே செல்போன் பயன்படுத்த வேண்டும். இதில் 8 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஒரு நாளைக்கு 40 நிமிடங்களும், 8 முதல் 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஒரு மணி நேரமும், 16 முதல் 17 வயதுக்கு உட்பட்டவர்கள் இரண்டு மணி நேரமும் செல்போனை பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள்.
இதில் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இரவு 10 மணி முதல் காலை 6:00 மணி வரை ஸ்மார்ட்போனின் எந்தவித சேவையும் வழங்கப்பட மாட்டாது. அதே போல் 3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பாடல் மற்றும் ஆடியோ மட்டும் கேட்கும் படி அமைக்க வேண்டும்.12 முதல் 16 வயது குழந்தைகள் கல்வி மற்றும் செய்தி மட்டும் கேட்கும் வகையில் அமைக்க வேண்டும் என தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு சீன அரசு அறிவித்து உள்ளது. மேலும் இதற்காக 10 மணி முதல் காலை 6 மணி முதல் இணையத்தை பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சைபர் ஃபேஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.