192 நாட்களுக்கு பிறகு பூமி திரும்பிய சீன விண்வெளி வீரர்கள்

November 4, 2024

சீனாவின் தியாங்காங் விண்வெளி நிலையத்தில் இருந்து 3 சீன வீரர்கள் திங்கள்கிழமை அதிகாலை பாதுகாப்பாக பூமிக்கு திரும்பியுள்ளனர். யெ குவாங்ஃபூ, லீ கோங், மற்றும் லீ குவாங்சூ என்ற இந்த வீரர்கள், கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதி விண்வெளிக்கு அனுப்பப்பட்டு 192 நாள்கள் ஆய்வுப் பணியில் ஈடுபட்டனர். இவர்கள் மே 28 மற்றும் ஜூலை 3-ஆம் தேதிகளில் முக்கியமான சாதனைகளை படைத்தனர். மேலும், தியாங்காங் விண்வெளி நிலையத்திற்கு உடைந்த செயற்கைகோள் பாகங்கள் தாக்காமலிருக்க, பாதுகாப்பு சாதனங்களை நிறுவினர். […]

சீனாவின் தியாங்காங் விண்வெளி நிலையத்தில் இருந்து 3 சீன வீரர்கள் திங்கள்கிழமை அதிகாலை பாதுகாப்பாக பூமிக்கு திரும்பியுள்ளனர்.

யெ குவாங்ஃபூ, லீ கோங், மற்றும் லீ குவாங்சூ என்ற இந்த வீரர்கள், கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதி விண்வெளிக்கு அனுப்பப்பட்டு 192 நாள்கள் ஆய்வுப் பணியில் ஈடுபட்டனர். இவர்கள் மே 28 மற்றும் ஜூலை 3-ஆம் தேதிகளில் முக்கியமான சாதனைகளை படைத்தனர். மேலும், தியாங்காங் விண்வெளி நிலையத்திற்கு உடைந்த செயற்கைகோள் பாகங்கள் தாக்காமலிருக்க, பாதுகாப்பு சாதனங்களை நிறுவினர்.

அப்போது, 1:24 மணியளவில், வடசீனாவில் உள்ள டோங்ஃபெங் இறங்கும் தளத்தில் அவர்கள் தரையிறங்கினர். 192 நாட்கள் பணி முடித்து, மூவரும் நலமாக இருப்பதாகவும், ஷென்சோ-18 திட்டம் வெற்றியடைந்ததாகவும் சீன விண்வெளித் துறை தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu