ஜப்பானின் எச் 3 ராக்கெட் மூன்றாவது முறையாக வெற்றி கரமாக ஏவப்பட்டுள்ளது. இந்த முறை அதிநவீன கண்காணிப்பு செயற்கைக்கோளை சுமந்து சென்றுள்ளது.
கடந்த ஜூன் 30ஆம் தேதி, Tanegashima Space Center ஏவுதளத்தில் இருந்து எச் 3 ராக்கெட் ஏவப்பட்டது. இதில் ALOS 4 அல்லது DAICHI 4 என்று அழைக்கப்படும் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் கொண்டு செல்லப்பட்டுள்ளது. ராக்கெட் ஏவப்பட்ட 16 நிமிடங்கள் கழித்து செயற்கைக்கோள் வெற்றிகரமாக பிரிந்து சென்றதாக ஜப்பான் விண்வெளி மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக, ஜப்பான் சார்பில் ஏவப்பட்ட எச் 3 ராக்கெட் தோல்வியில் முடிந்ததால் ஜப்பானின் செவ்வாய் கிரகத் திட்டம் தாமதமானது. ஆனால், இந்த முறை ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டு உள்ளதால், வரும் 2026 ஆம் ஆண்டுக்குள் செவ்வாய் கிரக திட்டத்தை செயல்படுத்த ஜப்பான் முடிவெடுத்துள்ளது.