சீனா, 2050-ஆம் ஆண்டுக்குள் மனிதர்களை ஏற்றிச் செல்லும் நிலவுப் பயணம், சந்திரனில் ஒரு ஆராய்ச்சி நிலையம் அமைத்தல், மற்றும் வாழக்கூடிய கிரகங்களை ஆய்வு செய்வது என மூன்று முக்கிய இலக்குகளை நிர்ணயித்துள்ளது. சீனாவின் உயர்மட்ட விண்வெளி நிறுவனங்கள் வெளியிட்டுள்ள இந்த திட்டத்தின்படி, 2028 மற்றும் 2035 க்கு இடையே சந்திரனில் ஒரு ஆராய்ச்சி நிலையம் கட்டப்படும். மேலும், வேற்று கிரகங்களில் உயிரினங்கள் இருக்கின்றனவா என்பதை ஆராய்வதும், புறக்கோள்களை ஆய்வு செய்வதும் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.
வரும் 2027-ஆம் ஆண்டுக்குள் சீனா தற்போது கட்டிக் கொண்டிருக்கும் விண்வெளி நிலையத்தை இயக்கத் தொடங்கும். அதோடு, மனிதர்களை ஏற்றிச் செல்லும் சந்திர ஆய்வுப் பணிகளையும், பிற கிரகங்களை ஆய்வு செய்யும் திட்டங்களையும் தொடங்கும். சூரிய குடும்பம் எப்படி உருவானது என்பது குறித்த ஆய்வு, இருண்ட பொருள் பற்றிய ஆய்வு, ஈர்ப்பு அலைகள் மற்றும் விண்வெளி வானிலை ஆகியவற்றைப் பற்றிய ஆய்வு ஆகியவை முக்கியமாக மேற்கொள்ளப்படுகின்றன.