நிலவில் இருந்து மாதிரிகளை சேகரிக்கும் திட்டத்தை செயல்படுத்திய சீனா

நிலவின் மறுபக்கத்தில் இருந்து மாதிரிகளை சேகரித்து வரும் திட்டத்தில் சீனா களமிறங்கியுள்ளது. இதற்காக இன்று ஆளில்லா விண்கலம் ஏவப்பட்டுள்ளது. Chang ‘e 6 என்று அழைக்கப்படும் விண்கலத்தை இன்று சீனா செலுத்தி உள்ளது. தெற்கு சீனாவில் உள்ள ஹைனன் தீவில் உள்ள வெங்சாங் ஏவுதளத்திலிருந்து லாங் மார்ச் 5 ராக்கெட் மூலம் விண்கலம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை பலர் பார்வையிட்டனர். விண்வெளி துறையில் சீனாவின் அதிகாரத்தை மேலோங்கச் செய்வதில் இந்தத் திட்டம் மிக முக்கியமானதாகும். […]

நிலவின் மறுபக்கத்தில் இருந்து மாதிரிகளை சேகரித்து வரும் திட்டத்தில் சீனா களமிறங்கியுள்ளது. இதற்காக இன்று ஆளில்லா விண்கலம் ஏவப்பட்டுள்ளது.

Chang ‘e 6 என்று அழைக்கப்படும் விண்கலத்தை இன்று சீனா செலுத்தி உள்ளது. தெற்கு சீனாவில் உள்ள ஹைனன் தீவில் உள்ள வெங்சாங் ஏவுதளத்திலிருந்து லாங் மார்ச் 5 ராக்கெட் மூலம் விண்கலம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை பலர் பார்வையிட்டனர். விண்வெளி துறையில் சீனாவின் அதிகாரத்தை மேலோங்கச் செய்வதில் இந்தத் திட்டம் மிக முக்கியமானதாகும். இந்த திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, நிலவின் தென் துருவப் பகுதியில் வரும் 2030 ஆம் ஆண்டு ஆய்வகம் அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது. நிலவின் மறுபக்கத்தில் கால் பதித்த முதல் மற்றும் ஒரே நாடு என்ற பெருமையை கொண்டிருக்கும் சீனா, இந்த திட்டத்தின் மூலம் அடுத்த நிலைக்கு செல்கிறது. எனவே, சீனாவின் இந்த திட்டத்தை உலக நாடுகள் அனைத்தும் உற்று கண்காணித்து வருகின்றன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu