இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனாவை சேர்ந்த சினோபக் நிறுவனம் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை அமைக்க உள்ளது. இதற்கான ஒப்புதலை இலங்கை அமைச்சரவை வழங்கியுள்ளது. இலங்கை அமைச்சர் காஞ்சன விஜேசேகர இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
சுமார் 37000 கோடி ரூபாய் மதிப்பில் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை அமைக்கப்படவுள்ளது. இது இலங்கையில் மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய அந்நிய நேரடி முதலீடு ஆகும். சுத்திகரிப்பு ஆலையுடன் சேர்ந்து பயிற்சி மையம் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் தயாரிப்பு சார்ந்த மையம் ஆகியவை கட்டமைக்கப்பட உள்ளன. சீனாவின் உதவியுடன் நிறுவப்பட்ட அம்பாந்தோட்டை துறைமுகத்தில் இந்த ஆலை அமைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.