ஜப்பானில் உள்ள புகுஷிமா அணு உலையில் இருந்து அணுக்கழிவு நீர் கடலில் கலக்கப்பட்டு வருகிறது. ஜப்பானின் இந்த நடவடிக்கைக்கு சர்வதேச அளவில் கடும் எதிர்ப்புகள் எழுந்தன. ஆனாலும், கதிரியக்க பாதிப்புக்கு உள்ளான அணுக்கழிவு நீர் கடலில் கலக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஜப்பானின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, ஜப்பான் நாட்டு பொருட்களை சீனா புறக்கணித்து வருகிறது.
சர்வதேச அளவில் சீன சந்தை மிகப்பெரிய தாக்கத்தை கொண்டுள்ளது. இந்த நிலையில், சீனாவில் ஜப்பான் பொருட்கள் புறக்கணிக்கப்படுவதால், சர்வதேச அளவில் பொருளாதாரம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவலுக்கு பிறகு, பொருளாதார மந்த நிலை சற்று சீர் பெற தொடங்கியுள்ள நிலையில், ஜப்பான் புறக்கணிப்பு காரணமாக, பொருளாதார மந்த நிலை தீவிரமடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர்.