சென்னையை சேர்ந்த முருகப்பா குழுமம் மற்றும் ஜப்பானின் மிட்சுயி சுமிடோமா நிறுவனம் ஆகியவற்றின் கூட்டாக சோழமண்டலம் எம் எஸ் காப்பீட்டு நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம், கடந்த 2023 ஆம் நிதி ஆண்டில், 27.6% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சூரிய நாராயணன் செய்தியாளர்களிடம் இந்த தகவல்களை தெரிவித்துள்ளார்.
2023 ம் நிதி ஆண்டில், நிறுவனத்தின் நிகர லாபம் 2160 கோடி அளவில் பதிவாகியுள்ளது. மேலும், நிறுவனத்தின் முதலீட்டுத் தொகை 14715 கோடியாக உயர்ந்துள்ளது. சோழமண்டலம் நிறுவனத்தின் பங்குகள் மோட்டார் வாகனத்தில் 5.3%, தனிநபர் விபத்து பிரிவில் 4.9%, வணிகப்பிரிவில் 33% வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய நிர்வாக இயக்குனர், சோழமண்டலம் வாடிக்கையாளர்களுக்காக பிரத்தியேக கைப்பேசியை அறிமுகம் செய்துள்ளதாக கூறினார்.