ஜிம்பாப்வே நாட்டில் காலரா நோய் பரவி வருகிறது. நோய் பாதிப்பு காரணமாக 100 பேர் உயிரிழந்து உள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.சுகாதாரமற்ற தண்ணீர் காரணமாக காலரா நோய் பரவி வருவதாக ஜிம்பாப்வே சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கடந்த 2018 முதல், சுகாதாரமற்ற சூழல் காரணமாக நோய் பாதிப்பு தீவிரமடைந்து வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதுவரையில், 4609 பேர் நோய் அறிகுறிகளுடன் காணப்பட்டதாகவும், அவர்களில் 935 பேருக்கு காலரா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தென்னாப்பிரிக்காவிலும், 15 ஆண்டுகளில் இல்லாத வகையில் பேதி நோய் பாதிப்பு உணரப்பட்டுள்ளது. மலாவி நாட்டிலும் இதுபோன்ற நோய் பாதிப்பு நடப்பாண்டில் நிகழ்ந்துள்ளது. எனவே, நோய் பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கிறது. ஜிம்பாப்வேயை பொறுத்தவரை, கடந்த 2008-09 ஆண்டுகளில், 4000 க்கும் மேற்பட்டோர் காலரா காரணமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.