முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ராணிப்பேட்டையில் திரவ நைட்ரஜன் மற்றும் திரவ ஆர்கான் உற்பத்தி ஆலை அமைக்கும் பணிக்கு இன்று அடிக்கல் நாட்டினார்.
ஆக்சிஜன் உற்பத்தியை மேற்கொண்டு வரும் எஸ்.ஓ.எல் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டத்தின் கீழ் திரவ மருத்துவ மற்றும் தொழில் ஆக்ஸிஜன், திரவ நைட்ரஜன் மற்றும் திரவ ஆர்கான் உற்பத்தியை மேற்கொள்வதற்காக அதிநவீன ஒருங்கிணைப்பு ஆலை அமைக்கும் பணிக்கு இன்று அடிக்கல் நாட்டினார். 145 கோடி ரூபாய் முதலீட்டில் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த விரிவாக்க திட்டம் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. இதன் மூலம் நாளொன்றுக்கு 80 டன் என்ற நிலையில் இருந்து 200 டன் என்ற அளவிற்கு உற்பத்தித் திறன அதிகரிக்கும்.














