பிரபல குளிர்பான நிறுவனமான கொக்கோகோலா, மகாராஷ்டிரா மாநிலத்தில் புதிய உற்பத்தி ஆலை அமைக்க உள்ளது. இதற்காக 1387 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் சுமார் 88 ஏக்கர் நிலம் கொக்கோகோலா நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இது லோட்டே பரசுராம் தொழில்நுட்ப பூங்கா பகுதியில் அமைந்துள்ளது. கொக்கோகோலாவின் இந்த ஆலை, வசிஷ்டி ஆற்று நீரை பயன்படுத்தும் என கூறப்பட்டுள்ளது. வரும் 2025 ஆம் ஆண்டு, இந்த ஆலை செயல்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 350 பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று இந்த ஆலைக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் சின்டே இதில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.