காக்னிசன்ட் டெக்னாலஜி சொலுஷன்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இந்தியர் ரவி குமார் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், அவர் நிறுவனத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் இணைக்கப்பட்டுள்ளார். அத்துடன், அவரது தலைமை பொறுப்பு உடனடியாக அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் முந்தைய தலைமை செயல் அதிகாரியான பிரியன் ஹம்பயர், வரும் மார்ச் 15ஆம் தேதி வரை, சிறப்பு ஆலோசகராக நிறுவனத்தில் பணிபுரிவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரவி குமார், இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவராக கடந்த 6 வருடங்கள் பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அவர் மகாராஷ்டிராவின் சிவாஜி பல்கலைக்கழகம் மற்றும் ஒடிசாவின் சேவியர் மேலாண்மை நிறுவனம் ஆகியவற்றில் தனது பட்டப்படிப்புகளை பயின்றவர். அத்துடன், அவர் பாபா அட்டாமிக் ரிசர்ச் சென்டரில் விஞ்ஞானியாக பணியாற்றினார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், காக்னிஸண்ட் நிறுவனத்தில் இணைந்துள்ளது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.