உலகின் மதிப்புமிக்க நிறுவனங்கள் பட்டியலில் ஆப்பிள் நிறுவனம் முதலிடத்தில் இருந்து வந்தது. இந்த நிலையில், ஆப்பிளை பின்னுக்குத் தள்ளி மைக்ரோசாப்ட் நிறுவனம் முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளது.
நிகழும் 2024 ஆம் ஆண்டின் தொடக்கம் முதல், ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் சரிவை சந்தித்து வருகின்றன. அதே வேளையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் வளர்ச்சி கண்டு வரும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பங்குகள் உயர்ந்து வருகின்றன. மைக்ரோசாப்ட் பங்குகள் 1.6% அளவில் உயர்ந்து, நிறுவனத்தின் சந்தை மதிப்பு 2.875 ட்ரில்லியன் டாலர்கள் அளவில் உள்ளது. அதே சமயத்தில், ஆப்பிள் பங்குகள் 0.9% வீழ்ச்சி அடைந்து, நிறுவனத்தின் சந்தை மதிப்பு 2.871 ட்ரில்லியன் டாலர்களாக உள்ளது. அதன்படி, மைக்ரோசாப்ட் நிறுவனம் உலகின் மதிப்புமிக்க நிறுவனமாக முதலிடம் பிடித்துள்ளது.