பஞ்சாபில் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 36 குழந்தைகள் பலியாகி உள்ளனர்.
பாகிஸ்தானில் கடும் குளிர் நிலவி வருகிறது. குறிப்பாக பஞ்சாப் மாகாணத்தில் குளிர் காரணமாக குழந்தைகள் நிமோனியா காய்ச்சலால் அவதிப்படுகின்றனர். கடந்த வாரம் சுமார் 36 குழந்தைகள் உயிரிழந்ததாக பஞ்சாப் மாகாண அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் இந்த காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால் வரும் 31ம் தேதி வரை பள்ளிகளில் காலை கூட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு நர்சரி குழந்தைகளுக்கு வருகிற 19ஆம் தேதி வரை தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. குழந்தைகள் இந்த நோய் தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள முகக்கவசம் அணிய வலியுறுத்தப்பட்டுள்ளனர். அதோடு சில பாதுகாப்பு நடவடிக்கை குறித்தும் அறிவித்தப்பட்டுள்ளனர்.
லாகூர் குழந்தைகள் மருத்துவமனையில் பத்தில் எட்டு பேர் நிமோனியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு பஞ்சாப் மாகாணத்தில் மட்டும் 990 குழந்தைகள் நிமோனியாவால் பலியாகினர். எனவே இந்த முறை பாதுகாப்பு நடவடிக்கைகள் எச்சரிக்கையாக எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பஞ்சாப் மாகாண காபந்து முதலமைச்சர் நக்வி மருத்துவத்துறையுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.