வளர்ப்பு பிராணிகளுக்கு கட்டாய லைசென்ஸ்

சென்னையில் எந்த வளர்ப்பு பிராணியாக இருந்தாலும் கட்டாயமாக லைசன்ஸ் பெற வேண்டும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி மற்றும் அவர்கள் தாயாரை இரண்டு நாய்கள் கடிதத்தில் அவர்கள் பலத்த காயம் அடைந்தனர். மேலும் காயங்களுடன் சிறுமி சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் நாய் உரிமையாளரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர். இந்த நிலையில் நாய்களின் உரிமையாளர் […]

சென்னையில் எந்த வளர்ப்பு பிராணியாக இருந்தாலும் கட்டாயமாக லைசன்ஸ் பெற வேண்டும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி மற்றும் அவர்கள் தாயாரை இரண்டு நாய்கள் கடிதத்தில் அவர்கள் பலத்த காயம் அடைந்தனர். மேலும் காயங்களுடன் சிறுமி சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் நாய் உரிமையாளரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர். இந்த நிலையில் நாய்களின் உரிமையாளர் சிறுமியின் சிகிச்சை செலவினை ஏற்பதாக கூறியுள்ளார். இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், மத்திய அரசு தடை செய்துள்ள 23 வகை நாய்களில் ராட்வீலர் வகையும் ஒன்றாகும். ராட்வீலர் வகை நாய்களை இனப்பெருக்கம் செய்யக்கூடாது என்ற தடையும் உள்ளது. இதன் அடிப்படையில் நாய்களின் உரிமையாளருக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மாநகராட்சி பொருத்தவரை எந்த வளர்ப்பு பிராணியாக இருந்தாலும் லைசன்ஸ் கட்டாயம் பெற வேண்டும். நாய்களுக்கு அனைத்து தடுப்பூசிகள் போட வேண்டும் என தெரிவித்துள்ளார்

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu