பிரபல திரைப்பட இயக்குநர் எஸ். ஷங்கரின் ரூ.10.11 கோடி மதிப்புள்ள அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. பிஎம்எல்ஏ 2002 சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 2010 ஆம் ஆண்டு வெளியான ‘எந்திரன்’ திரைப்படத்தின் கதை தொடர்பாக எழுந்த புகாரில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.
அமலாக்கத் துறை விசாரணையில் பண முறைகேடு தொடர்பாக குற்றச்சாட்டு எழுந்ததன் பின்னணியில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், ஷங்கர் இயக்கிய ‘இந்தியன் 2’ மற்றும் ‘கேம் சேஞ்சர்’ திரைப்படங்கள் எதிர்பார்த்த வருவாயை பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.














