ராமேஸ்வரத்தில் வரும் பத்தாம் தேதி மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் தலைமையில் போராட்டம் நடைபெறும் என கே. எஸ் அழகிரி அறிவித்துள்ளார்.
பாக் நீர் இணைப்பு பகுதியில் அடிக்கடி மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் இலங்கை கடற்கரையினரால் கைது செய்யப்பட்டும், மீனவர்களின் மீன் பிடி படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த மூன்றாம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று 23 மீனவர்கள் கைதி செய்யப்பட்டுள்ளனர். இரண்டு நவீன விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு செய்யப்பட்டுள்ளன. கைதி செய்யப்பட்டவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் 14ஆம் தேதி வரை சிறை தண்டனை விதித்துள்ளது. இந்த நிலையில் மீனவ சமுதாயத்தின் உரிமைகளை பாதுகாப்பதற்கு மத்திய பாஜக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ தலைமையில் வருகிற பத்தாம் தேதி காலை 10 மணி அளவில் ராமேஸ்வரம் பாம்பன் பஸ் நிலையம் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.