பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது.
தமிழ்நாட்டில் பி.இ, பி.டெக் போன்ற படிப்புகளுக்கான அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் இன்று கலந்தாய்வு தொடங்கியுள்ளது. முன்னதாக இரண்டு லட்சம் மாணவ, மாணவிகள் கல்லூரியில் சேர்வதற்கு தகுதியானவர்களாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு கலந்தாய்வு தொடங்கியுள்ளது. அதனை தொடர்ந்து சிறப்பு இட ஒதுக்கீடு பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்குகிறது. அடுத்ததாக விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது. அதேபோன்று பொதுப்பிரிவு கலந்தாய்வு வரும் 29ஆம் தேதியும் நடைபெறுகிறது. தமிழகத்தில் உள்ள 433 பொறியியல் கல்லூரிகளில் 2.41 லட்சம் இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும்.