இஸ்ரோ ஸ்ரீஹரிகோட்டாவில் பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுடன் புரோபா-3 செயற்கைகோளை ஏவுதற்கு கவுண்ட்டவுன் தொடங்கியது.
ஐரோப்பிய விண்வெளி நிறுவனம், 'புரோபா-3' என பெயரிடப்பட்ட 2 செயற்கைகோள்களை உருவாக்கியுள்ளது. இந்த செயற்கைகோள்கள் சூரியன் ஒளிவட்டப் பகுதியை ஆய்வு செய்யும் நோக்குடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. 550 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைகோள், ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து நாளை (புதன்கிழமை) மாலை 4.08 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படும். இந்த செயற்கைகோள்கள் 600 கிலோ மீட்டர் தூரம் மற்றும் 60,530 கிலோ மீட்டர் உயரத்திற்கு பின்பு இணை சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்தப்படும். ராக்கெட்டின் இறுதிக்கட்ட கவுண்ட்டவுன் இன்று (செவ்வாய்க்கிழமை) 3.08 மணிக்கு தொடங்கியு