அரியானா மற்றும் ஜம்மு காஷ்மீரில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
அரியானாவில் சட்டசபை தேர்தல் வெற்றிகரமாக நடைபெற்றது. இதில் 67.90% வாக்குகள் பதிவானது.
இங்கு பா.ஜ.க. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி புரிகிற நிலையில், காங்கிரசுக்கு பெரும்பான்மை வாய்ப்பு உள்ளது. மேலும் ஜம்மு-காஷ்மீர் தேர்தலில் 63.88% வாக்குகள் பதிவாகின. 10 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இந்த தேர்தல், 2019-ல் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு முதன்முறையாகும். இந்நிலையில் நாளை அரியானா மற்றும் ஜம்மு காஷ்மீரில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.