ஆபாச வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரச்சினை பிரஜ்வால் ரோவண்ணாவிற்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விடுத்து உத்தரவிடப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தின் முன்னாள் எம்.பி ரோவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளி ஆனதை தொடர்ந்து அவர் ஜெர்மனிக்கு தப்பி சென்றார். பின்னர் அவரை சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் கடந்த 31ஆம் தேதி பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர். இதனை அடுத்து கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு ஏழு நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. இது கடந்த 6 ஆம் தேதி முடிவடைந்த நிலையில் மீண்டும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார். அப்போது மேலும் ஐந்து நாட்கள் போலீசார் விசாரணை நடத்த அனுமதி கேட்டனர். இந்நிலையில் நேற்றுடன் காவல் முடிவடைந்தது. அதன்படி கோர்ட்டில் ஆஜர் படுத்தபட்டார். அதில் 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து பெங்களூர் செசன் நீதிமன்றம் உத்தரவிட்டது