மணிப்பூரில் தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூரில் ஏற்பட்ட கலவரத்தால் 35 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில் மணிப்பூரில் இயல்புநிலை திரும்பி வருகிறது. நிவாரண முகாம்களில் உள்ள 1,700 பேரை இன்னும் வீடுகளில் குடியமர்த்த வேண்டி உள்ளது. மாநிலத்தில் இன்னும் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக இன்று காலை 5 மணி முதல் 11 மணி வரை ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. கலவரத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.