வங்கக் கடலில் உருவான மோச்சா புயல் மியான்மர் நாட்டில் கரையைக் கடந்தது. அதே வேளையில், மியான்மர் எல்லையில் உள்ள இந்திய மாநிலமான மிசோரமில் மோச்சா புயலால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. 230 க்கும் அதிகமான வீடுகள் இந்த புயலில் சேதம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மிசோரம் தவிர, மேற்கு வங்க மாநிலத்தின் தெற்கு மாவட்டங்கள் மற்றும் கொல்கத்தா நகரம் ஆகியவையும் மோச்சா புயலின் தாக்கத்தை உணர்ந்ததாக சொல்லப்படுகிறது.
இந்தப் பகுதிகளில், பல மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்ததாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும், விழுந்த மரங்கள் வீடுகள் மீதும் வாகனங்கள் மீதும் விழுந்ததில், பல கார்கள் மற்றும் வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன. இங்கு மணிக்கு 81 கிலோமீட்டர் வேகத்தில் புயல் காற்று வீசியதாக கூறப்படுகிறது. மேலும், இந்த புயல் காரணமாக 9 பேர் பலியாகி உள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.