டிசம்பர் 7 முதல் 29 வரை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து இந்திய நாடாளுமன்ற விவகார மந்திரி பிரகலாத் ஜோஷி டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், நடப்பு ஆண்டில் வருகிற டிசம்பர் 7-ந்தேதி தொடங்கி 29-ந்தேதி வரை நடைபெறும். வரவிருக்கிற குளிர்கால கூட்டத்தொடரில் மொத்தம் 17 பணி நாட்கள் இருக்கும் என தெரிவித்துள்ளார்.
கொரோனா பெருந்தொற்று எண்ணிக்கை குறைந்த சூழலில், நாடாளுமன்ற இரு அவைகளின் உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்களுக்கு முழு அளவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்ட நிலையில், பெரிய அளவில் கொரோனா கட்டுப்பாடுகள் எதுவுமின்றி கூட்டம் நடைபெறும் என நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.