மணிப்பூர் வன்முறையை தொடர்ந்து 7,500 மக்களை வெளியேற்ற முடிவு

மணிப்பூர் வன்முறையை தொடர்ந்து 7,500 மக்களை வெளியேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. மணிப்பூரில் மெய்தெய் என்ற சமூகம் உள்ளது. தங்களை பழங்குடியினத்தில் சேர்க்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கு மற்றொரு பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்து பழங்குடி மாணவர் சங்கம் சார்பிலான ஒற்றுமை பேரணி என்ற பெயரில் ஊர்வலம் நடத்தினர். வீடுகள், குடியிருப்புகள், கடைகளுக்கு தீ வைக்கப்பட்டு கலவரம் வெடித்தது. இதனால் அங்கு அரசு இணையதள சேவையை முடக்கியும், ஊரடங்கை அமல்படுத்தியும் உள்ளது. சட்டம் மற்றும் […]

மணிப்பூர் வன்முறையை தொடர்ந்து 7,500 மக்களை வெளியேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

மணிப்பூரில் மெய்தெய் என்ற சமூகம் உள்ளது. தங்களை பழங்குடியினத்தில் சேர்க்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கு மற்றொரு பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்து பழங்குடி மாணவர் சங்கம் சார்பிலான ஒற்றுமை பேரணி என்ற பெயரில் ஊர்வலம் நடத்தினர். வீடுகள், குடியிருப்புகள், கடைகளுக்கு தீ வைக்கப்பட்டு கலவரம் வெடித்தது. இதனால் அங்கு அரசு இணையதள சேவையை முடக்கியும், ஊரடங்கை அமல்படுத்தியும் உள்ளது.

சட்டம் மற்றும் ஒழுங்கை மீட்டெடுக்கவும், கூடுதல் பாதுகாப்பிற்காகவும் இந்திய ராணுவம் மற்றும் அசாம் ரைபிள் படை பிரிவுகளும் வரவழைக்கப்பட்டு உள்ளனர். அனைத்து சமூகங்களை சேர்ந்த மக்கள் என 7,500 பேரை பாதுகாப்பாக இரவில் இருந்து வெளியேற்றும் பணி தொடர்ந்து வருகிறது. இதுபற்றி மத்திய மந்திரி அமித்ஷா, மணிப்பூர் முதல்-மந்திரி பைரன் சிங்கை தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு பேசினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu