கலைஞர் மகளிர் உரிமை தொகையை பெற மேல்முறையீடு செய்தவர்களின் விண்ணப்பங்கள் இந்த மாதமே பரிசீலனை செய்து தொகையை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் 1.06 கோடி மக்களுக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாதந்தோறும் குடும்ப தலைவிகளுக்கு ரூபாய் 1000 வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இதில் உரிமைதொகை கிடைக்காத நபர்கள் மேல்முறையீடு செய்த நிலையில் அவர்களது விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன. மேலும் கூடுதலாக 7.35 லட்சம் மகளிருக்கு நவம்பர் முதல் உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி தற்போது மொத்தமாக ஒரு கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 மகளிர் உரிமைத் தொகையை பெற்று வருகின்றனர். மேலும் இவர்களது வாழ்வாதார நிலையை தொடர்ந்து ஆய்வு செய்யவும் புதிய விண்ணப்பங்களை பரிசீலனை செய்யவும் புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. அதன்படி உரிமை தொகை திட்டத்திற்கான பணிகள் இன்னும் வேகம் எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.