டெல்லியில் மாநிலங்களவையில் அவசர சட்ட திருத்த மசோதாவின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு டெல்லி சேவை மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் அதிகாரங்களை குறைக்கும் வகையில் மத்திய அரசு அவசர சட்டத்தை கொண்டு வந்தது. இதற்கான மசோதா பாராளுமன்ற மக்களவையில் 3ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்த்து வந்தனர். மாநிலங்களவையில் விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது உச்ச நீதிமன்ற தீர்ப்பை எந்த வகையிலும் மீறவில்லை என்றும் ஊழலை தடுப்பதுமே இந்த மசோதாவின் நோக்கம் என்றும் அமித் ஷா கூறியுள்ளார்.
மேலும் இந்த டெல்லி சேவைகள் மசோதா மீதான விவாதம் முடிவடைந்ததை அடுத்து வாக்கெடுப்பு எடுக்கப்பட்டது. இதற்கு ஆதரவாக 131 வாக்குகளும், எதிராக 102 வாக்குகளும் பதிவான நிலையில் டெல்லி சேவைகள் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.