செல்லாத நோட்டு அறிவிப்பு யோசித்து எடுக்கப்பட்ட முடிவு என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புழக்கத்தில் இருந்த, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என 2016 நவம்பரில் அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை, நீதிபதிகள் எஸ்.ஏ.நசீர், பி.ஆர். கவாய், ஏ.எஸ். போபண்ணா, வி.ராமசுப்ரமணியன், பி.வி.நாகரத்தினா அடங்கிய உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் மத்திய அரசின் சார்பில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ரிசர்வ் வங்கி சட்டத்தின் படி, ரிசர்வ் வங்கி பரிந்துரையின் அடிப்படையில் செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது.
கள்ள நோட்டு, பயங்கரவாதத்துக்கு நிதி, வரி ஏய்ப்பு, கறுப்புப் பணத்தைக் களைவது போன்றவை இந்த முடிவின் ஒரு பகுதியாகும். பண மதிப்பிழப்பு செய்வதால் மக்களுக்கு பிரச்னைகள் ஏற்படுவதை தடுக்க விரிவாக ஆலோசனை நடத்தப்பட்ட பின்பே இந்த முடிவு எடுக்கப்பட்டது என கூறியுள்ளது.