உலகின் முதல் ஏஐ மென்பொறியாளர் கருவியை காக்னிஷன் என்ற நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. டெவின் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சாதனத்தின் துணையோடு கோடிங் பணிகளை எளிமையாக மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாட் ஜிபிடி வருகைக்குப் பிறகு செயற்கை நுண்ணறிவு துறை அசுர வளர்ச்சி கண்டு வருகிறது. பல்வேறு செயற்கை நுண்ணறிவு சாதனங்கள் கோடிங் எழுதும் திறனோடு உள்ளன. எனினும், மனிதனால் எளிதில் அடையாளம் காணக்கூடிய வகையில் அவை உள்ளன. இந்த நிலையில், காக்னிஷன் நிறுவனம் வடிவமைத்துள்ள டெவின் ஏஐ சாதனம், சவாலான கோடிங்கை கூட மிகச் சிறப்பாக எழுதுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மென்பொறியாளர் பணிக்கான நேர்முகத் தேர்வில் இந்த ஏஐ கருவி தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருவியை பயன்படுத்துவது பற்றிய டெமோ வீடியோ ஒன்றை காக்னிஷன் நிறுவனம் வெளியிட்டுள்ளது.