அண்மையில், கோட்டக் மஹிந்திரா வங்கியின் தலைமை செயல் அதிகாரி உதய் கோட்டக் பதவி விலகுவதாக அறிவித்தார். அதன்படி, வங்கியின் இடைக்கால பொது மேலாளர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பதவிக்கு தீபக் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனத்துக்கு மத்திய ரிசர்வ் வங்கி ஒப்புதல் வழங்கியுள்ளது. அடுத்த 2 மாத காலத்திற்கு அவர் இந்த பதவியில் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோட்டக் மஹிந்திரா வங்கியின் அடுத்த தலைவருக்கான மிகப்பெரிய தேர்ந்தெடுப்பு நடைமுறை தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, அடுத்த முழு நேர பொது மேலாளர் பதவிக்கு பலர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும், அவை மத்திய ரிசர்வ் வங்கியின் ஒப்புதலுக்காக காத்திருப்பில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.