குரூப் 4 பணிக்கு தேர்வானவர்கள் பட்டியலை இணையத்தில் வெளியிட டிஎன்பிஎஸ்சி க்கு உத்தரவு

December 12, 2023

குரூப் 4 பணிக்கு தேர்வானவர்கள் பட்டியலை ஜனவரி மாதம் எட்டாம் தேதிக்குள் இணையத்தில் வெளியிட வேண்டும் என டிஎன்பிஎஸ்சி க்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்வில் விடைத்தாள் மோசடி நடைபெற்றுள்ளது எனவும் இதன் நகல் கேட்டு உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதற்கான விடைத்தாள்கள் நகல் மனு தாரர்களுக்கு வழங்கப்பட்டது. அதனை ஆய்வு செய்து பணிக்கு தேர்வாகும் அளவுக்கு மதிப்பெண் இருந்தது. இருப்பினும் பணி அவர்களுக்கு பணி கிடைக்கவில்லை. […]

குரூப் 4 பணிக்கு தேர்வானவர்கள் பட்டியலை ஜனவரி மாதம் எட்டாம் தேதிக்குள் இணையத்தில் வெளியிட வேண்டும் என டிஎன்பிஎஸ்சி க்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்வில் விடைத்தாள் மோசடி நடைபெற்றுள்ளது எனவும் இதன் நகல் கேட்டு உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதற்கான விடைத்தாள்கள் நகல் மனு தாரர்களுக்கு வழங்கப்பட்டது. அதனை ஆய்வு செய்து பணிக்கு தேர்வாகும் அளவுக்கு மதிப்பெண் இருந்தது. இருப்பினும் பணி அவர்களுக்கு பணி கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து இறுதி விடை பட்டியலுடன் ஒப்பிட்டு சரியான மதிப்பெண் வழங்கவும் குரூப் 4 பணி வழங்கவும் உத்தரவிட வேண்டும் என மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை விசாரித்த நீதிபதி ஆர். விஜயகுமார் டிஎன்பிஎஸ்சி தரப்பில் மனுதாரர்களுக்கு விடைத்தாள் நகல் வழங்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்த குரூப் 4 பணியிடங்களுக்கு தேர்வானவர்களின் பட்டியலை ஜனவரி 8ஆம் தேதிக்குள் இணையதளத்தில் வெளியிட வேண்டும் எனவும் மனுதாரர்கள் காட்டிலும் குறைவாக மதிப்பெண் பெற்றவர்கள் தேர்வான பட்டியலில் இருந்தால் நீதிமன்றத்தை நாடலாம் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu