தெலுங்கானா வனப்பகுதியில் அறிய வகை நீல நிற காளான்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலம் அடிலாபாத் வனப்பகுதியில் காவால் புலிகள் காப்பகம் உள்ளது. இந்த வனத்தை ஒட்டிய காடுகளில் வனத்துறையினர் ரோந்து சென்று வருகின்றனர். கடந்த 4 நாட்களுக்கு முன்பு வனக்காவலர்கள் ரோந்து சென்றபோது காட்டில் நீல நிற காளான்கள் இருப்பதைக் கண்டனர். இதுவரை எங்கும் பார்த்திடாத வகையில் அறிய காளான்களாக காட்சியளித்தன. இதுகுறித்து முழுகுவில் உள்ள வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
ஆராய்ச்சி நிறுவனத்தின் உதவி பேராசிரியர் ஜெகதீஸ் பத்துலா தலைமையிலான குழுவினர் வனப்பகுதிக்கு விரைந்து சென்றனர். அவர்கள் காடுகளில் குறைந்த எண்ணிக்கையில் காணப்பட்ட நீல நிறத்திலான காளான்களை எடுத்து வந்து ஆய்வு செய்து வருகின்றனர்.