தீபாவளியை முன்னிட்டு சென்னை சென்ட்ரல் - கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் நெரிசலை குறைப்பதற்காக, தெற்கு ரெயில்வே முக்கிய இடங்களுக்கு சிறப்பு ரெயில்களை இயக்கும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னையிலிருந்து கன்னியாகுமரி, செங்கோட்டை மற்றும் மங்களூரு ஆகிய இடங்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இந்த ரெயில்கள் குறிப்பிட்ட தேதிகளில் இயக்கப்படும். அதேபோல் சிறப்பு ரெயில்களுக்கு முன்பதிவு இன்று தொடங்குகிறது. இது பயணிகளுக்கு வசதியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.