தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு 47 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது - மு.க.ஸ்டாலின் 

தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு 47 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையை அடுத்த ஒரகடத்தில் ரூ.762.30 கோடி மதிப்பீட்டில் 22 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள 'தொழில் 4.0' தொழில்நுட்ப மையங்கள் தொடக்க விழா இன்று நடைபெற்றது. இந்த தொழில்நுட்ப மையங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், 2022-2023-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் பதிவு செய்து உள்ள தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 7, 33, […]

தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு 47 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னையை அடுத்த ஒரகடத்தில் ரூ.762.30 கோடி மதிப்பீட்டில் 22 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள 'தொழில் 4.0' தொழில்நுட்ப மையங்கள் தொடக்க விழா இன்று நடைபெற்றது. இந்த தொழில்நுட்ப மையங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், 2022-2023-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் பதிவு செய்து உள்ள தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 7, 33, 296 ஆகவும், உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை 47, 14, 148 ஆகவும் உயர்ந்துள்ளது.

தற்போது தொடங்கப்பட்டுள்ள தொழில் நுட்ப மையங்கள் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 10 ,040 மாணவர்கள் தொழில் 4.0 தரத்திலான தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெறுவார்கள். இதுபோன்ற நவீன தொழில்நுட்ப பிரிவுகளில் பயிற்சி பெறுவோருக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் முன்னணி நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் கிடைக்கப் பெறும் என்று அவர் பேசினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu