பிரதமர் மோடிக்கு டொமினிகா நாட்டின் உயரிய தேசிய விருது வழங்கப்படவுள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்தியா, டன் கணக்கில் மருந்துகளை டொமினிகா உள்ளிட்ட நாடுகளுக்கு அனுப்பி உதவி செய்தது. இதையடுத்து, டொமினிகா மற்றும் இந்தியா இடையேயான நட்புறவை பலப்படுத்துவதற்காக, பிரதமர் மோடியை கௌரவிக்க முடிவு செய்யப்பட்டது. அந்நாட்டு அரசு, பிரதமர் மோடிக்கு தனது உயரிய தேசிய விருதை வழங்க முடிவு செய்துள்ளது. இந்த விருது, 19-21 வதும் ஜார்ஜ்டவுன் நகரில் நடைபெறவுள்ள இந்தியா-கேரிகோம் உச்சி மாநாட்டின் போது, டொமினிகாவின் ஜனாதிபதி சில்வானி புர்தன் மோடிக்கு வழங்கி கௌரவிப்பார். 2021-ம் ஆண்டில், கொரோனா தடுப்புக்கான 70,000 ஆஸ்டிராஜெனிகா டோஸ்களை டொமினிகாவுக்கு இந்தியா வழங்கியது. இதையடுத்து, பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், விருது வழங்கப்படுவதாக டொமினிகாவின் பிரதமர் ரூஸ்வெல்ட் ஸ்கெர்ரிட் கூறினார்.