18 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் 25 வயதாகும் வரை ஓட்டுநர் உரிமம் வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 18 வயது நிரம்பாத சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதால் சாலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் 18 வயது ஆகாதவர்கள் வாகனம் ஓட்டி பிடிபட்டால் அவர்களின் வாகனத்தின் பதிவு சான்றிதழ் ரத்து செய்யப்படும். மேலும் ரூபாய் 25,000 அபராதமும், 25 வயதாகும் வரை ஓட்டுனர் உரிமமும் வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறை ஜூன் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது