ரஷ்யா, உக்ரைனின் செர்னோபில் அணுமின் நிலையத்தை டிரோன் மூலம் தாக்கியது.
ரஷியா 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் திடீரென உக்ரைன் மீது போர் தொடுத்தது. அதன் பிறகு மூன்று ஆண்டுகளாக இரு நாடுகளும் மோதிக்கொண்டிருப்பதுடன், தற்போதைய நிலையில் இரண்டு நாடுகளும் டிரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளன. உக்ரைன், கடந்த மாதம், ரஷியாவின் எண்ணெய் கிடங்குகள் மற்றும் ஆயுத கிடங்குகளுக்கு டிரோன் தாக்குதல்களை மேற்கொண்டது, இதில் ரஷியாவுக்கு பெரிதும் இழப்புகள் ஏற்பட்டன. இந்நிலையில், இன்று காலை ரஷியா உக்ரைனின் செர்னோபில் அணுமின் நிலையத்தை டிரோன் மூலம் தாக்கியது. செர்னோபில் அணுமின் நிலையத்தின் 4-வது உலையில் கதிரியக்கம் வெளியேறாமல் இருக்க கான்கிரீட் கூரை அமைக்கப்பட்டது. இந்த கூரை டிரோன் தாக்குதலுக்கு உள்ளாகி, தீப்பற்றி எரிந்தாலும், கதிர்வீச்சு வெளியேறவில்லை என்று உக்ரைனின் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார். இது தவிர, 1986-ம் ஆண்டில் ஏற்பட்ட அசாதாரண அணுமின் விபத்திற்குப் பிறகு, அணு உலையின் பாதுகாப்புக்காக இந்த கான்கிரீட் கூரை அமைக்கப்பட்டிருந்தது.உக்ரைனில் தற்போது 4 அணுமின் நிலையங்களுக்கு ஆபத்து உண்டாகி உள்ளது என்று எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. அதில், தெற்குப் பகுதியில் உள்ள ஜபோரிஸ்சியா அணுமின் நிலையம், ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமாக கருதப்படுகிறது.