ஊட்டி மற்றும் கொடைக்கானல் போன்ற சுற்றுலா தளங்களுக்கு செல்வதற்காக இ-பாஸ் கட்டாயம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கொடைக்கானல் மற்றும் ஊட்டி போன்ற சுற்றுலாத்தலங்களில் கோடை காலம் என்பதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் அங்குள்ள சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும் நோக்கத்தில் இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி மே 7ஆம் தேதியிலிருந்து ஜூன் 30-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் கொடைக்கானல் மற்றும் ஊட்டி வருவோர் இ - பாஸ் பெறுவது கட்டாயமாக உள்ளது. தற்போது இதற்கான இணையதள முகவரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதில் சுற்றுலாப் பயணிகள்
epass.tnega.org என்ற இணையதளத்தில் காலை 6 மணி முதல் இபாஸ் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.