நியாண்டர்தால்களின் இரக்க குணத்தை பறைசாற்றும் காது எலும்பு

கடந்த 1989 ஆம் ஆண்டு ஸ்பெயினில் உள்ள வேலன்சியா நகரில் உள்ள கோவா நேக்ரா குகையில் நியாண்டர்தால் சிறுமியின் காது எலும்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அந்த சிறுமிக்கு டீனா என விஞ்ஞானிகள் பெயரிட்டு அழைத்து வருகின்றனர். டீனாவின் காது எலும்பு நியாண்டர்தால் மனிதர்களின் இரக்க குணம் பற்றி பல தகவல்களை தெரிவிப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். டீனாவின் எலும்புக்கூடை ஆராய்ந்ததில், அவர் 6 வயது நிரம்பிய டவுன் சின்ட்ரோம் பாதித்த சிறுமி என்பது தெரியவந்துள்ளது. பொதுவாக, இத்தகைய குறைபாடு […]

கடந்த 1989 ஆம் ஆண்டு ஸ்பெயினில் உள்ள வேலன்சியா நகரில் உள்ள கோவா நேக்ரா குகையில் நியாண்டர்தால் சிறுமியின் காது எலும்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அந்த சிறுமிக்கு டீனா என விஞ்ஞானிகள் பெயரிட்டு அழைத்து வருகின்றனர். டீனாவின் காது எலும்பு நியாண்டர்தால் மனிதர்களின் இரக்க குணம் பற்றி பல தகவல்களை தெரிவிப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

டீனாவின் எலும்புக்கூடை ஆராய்ந்ததில், அவர் 6 வயது நிரம்பிய டவுன் சின்ட்ரோம் பாதித்த சிறுமி என்பது தெரியவந்துள்ளது. பொதுவாக, இத்தகைய குறைபாடு உள்ள குழந்தைகள் நெடுநாட்களுக்கு வாழ மாட்டார்கள். அதிலும் நியாண்டர்தால் மனிதர்களின் மொத்த வாழ்க்கை காலமே குறைவு என்ற நோக்கில், அவர் ஆறு வயது வரை வாழ்ந்திருப்பது மிகப்பெரிய விஷயமாக விஞ்ஞானிகளால் பார்க்கப்படுகிறது. அதன்படி, அந்த சிறுமியை பெற்ற தாய் மட்டுமே தனியாக கவனித்துக் கொள்ள முடியாது; மற்றவர்களும் சேர்ந்து கவனித்திருக்க வேண்டும் என்ற ஊகத்திற்கு வந்துள்ளனர். அப்படிப் பார்த்தால், சிறுமியிடமிருந்து எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காமல், அவருக்கு பல்வேறு உதவிகளை நியாண்டர்தால் மனிதர்கள் செய்துள்ளனர். எனவே, அவர்களுக்கு தன்னலமற்ற இரக்க குணம் இருந்துள்ளது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu