இந்தோனேசியாவில் நேற்று 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா பகுதி அருகே கடல் பகுதியில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவாகியுள்ளது என்று தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
கடலுக்கு அடியில் துபான் ரீஜென்சிக்கு வடகிழக்கு பகுதியில் சுமார் 132 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டு 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் நேரப்படி நேற்று காலை 11:20 மணி அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.