மலேரியா நோயை முற்றிலும் ஒழித்தொழித்ததற்காக, எகிப்தை 'மலேரியா இல்லாத நாடு' என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. நூற்றாண்டு கால போராட்டத்திற்குப் பிறகு கிடைத்த இந்த வெற்றி, எகிப்து மக்கள் மற்றும் அரசின் அயராத உழைப்பிற்கு கிடைத்த சான்றாகும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கெப்ரியேசஸ் தெரிவித்துள்ளார். தற்போது, எகிப்துடன் சேர்த்து, உலகளவில் 44 நாடுகள் மலேரியா இல்லாத நாடுகளாக உள்ளன.
மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக மலேரியா நோய் பரவாமல் இருப்பதை நிரூபித்து, குறிப்பிட்ட தகுதிகளை பூர்த்தி செய்தால் மட்டுமே ஒரு நாடு 'மலேரியா இல்லாத நாடு' என அறிவிக்கப்படும். ஆண்டுதோறும் உலகளவில் சுமார் 6 லட்சம் பேர் மலேரியா நோயால் உயிரிழக்கின்றனர். இதில் 95% பேர் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்கள். இந்நிலையில், எகிப்து தீவிரமான தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சுகாதாரத் துறையின் அர்ப்பணிப்பு காரணமாக, இந்த நோயை முற்றிலுமாக ஒழித்து சாதனை படைத்துள்ளது.